follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு

பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு

Published on

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சம்பத் புஸ்பகுமார என்ற கைதியின் மனைவி எம்.ஜி.லசந்தி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதிகளின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட வெலிசர நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தவறியுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...