follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1ஆளும் கட்சியின் அமைச்சர்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு

ஆளும் கட்சியின் அமைச்சர்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு

Published on

எதிர்வரும் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் நீண்ட வார இறுதியில் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் ஜனாதிபதி செயலகத்தினால் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்படலாம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வார இறுதியில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹித அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட அமைச்சர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்களின் பதவிகள் மாறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட போது, ​​தனக்கும் இவ்வாறான செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அது தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...