follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1“சமீபத்தில் நான் கடைக்கு செல்லவில்லை” – அரிசி விவகாரத்தில் மஹிந்த – சஜித் மோதல்

“சமீபத்தில் நான் கடைக்கு செல்லவில்லை” – அரிசி விவகாரத்தில் மஹிந்த – சஜித் மோதல்

Published on

அரிசி விலை குறித்த தகவல் தெரியாததால், கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையை அறிந்து கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த அமரவீர தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“நீங்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பகுதியில் 125 ஆக பதிவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறியவும். நீங்களும் செல்லுங்கள். இங்கே யாரும் சொல்வதைச் சொல்லாதீர்கள். பாஸ்மதி கீரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் கெக்குலு அரிசியை உண்கின்றனர். அதுவும் 200க்கு மேல் விற்கவில்லை.

எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாடு முழுவதும் யூரியா வேலைத்திட்டம் ஒழுங்காக செல்கிறது. மண் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக எம்ஓபி உரம் உள்ளது. சில அதிகாரிகள் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக உரத்தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...