follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP1பொலிஸ்மா அதிபரின் பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது

பொலிஸ்மா அதிபரின் பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது

Published on

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

எவ்வாறாயினும், அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வெளிநாட்டில் உள்ள ஜனாதிபதி, நாடு திரும்பிய பின்னர் தீர்மானம் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...