follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

Published on

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக வசூலித்தல், சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுகளால் தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி, அனைத்து சூதாட்டதாரர்களை பாதிக்கும் வகையில் சூதாட்ட ரெகுலேட்டரி அதாரிட்டி எனப்படும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய பின்னடைவு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...