follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வரி செலுத்தாவிட்டால் உரிமம் இடைநிறுத்தப்படும்

வரி செலுத்தாவிட்டால் உரிமம் இடைநிறுத்தப்படும்

Published on

இலங்கையில் உள்ள 9 முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கலால் திணைக்களம் வழங்கிய 14 நாள் கால அவகாசத்திற்குள் 6.2 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், உரிமத்தை இடைநிறுத்தப் போவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் 14 நாளினுள் இது அமுலுக்கு வருகிறது.

இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய நிலுவைத் தொகையை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும், இது உண்மைக்குப் புறம்பானது என்றும் சிலர் வாதிடலாம் என்றும் கலால் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கலால் திணைக்களத்திற்கு கட்டணம் அறவிடப்படாமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள 6.2 பில்லியன் ரூபா வரிகளில் 2.5 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை எனவும் எஞ்சிய 3.8 பில்லியன் ரூபா தாமதக் கட்டணம் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 முக்கிய நிறுவனங்களால் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைகள் மற்றும் தாமதக் கட்டணம் 1997 ஆம் ஆண்டு வரை 26 வருடங்களாக நீள்வதாகவும், சில நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக வரி செலுத்துவதில் தவறிழைத்து வருவதாகவும் கலால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...