follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மேலும் சில இறக்குமதிகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்

மேலும் சில இறக்குமதிகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்

Published on

நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சியை வருடத்தின் இரண்டாம் காலாண்டில் காணலாம் எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி வெளிநாட்டு அலைவரிசைக்கு அளித்த பேட்டியில், நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

“முந்தைய நிலவரத்தையும், தற்போதைய நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு விலையும் தற்போது குறைந்து வருகிறது. அரசாங்கம் தற்போது பல இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெளியிட்டு, மேலும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அனைத்து தரவுகளும் நுகர்வோர் நம்பிக்கையின் மீள் எழுச்சியை சுட்டிக்காட்டுகின்றன, மேலும் இந்த வருடத்தில் ரூபாய் வலுவடைந்து வருகிறது.

மேலும் பங்குச் சந்தை விலைக் குறியீடு மிகவும் நேர்மறையாக இருப்பதைக் காணலாம். எனவே, நுகர்வோரின் ஆர்வத்துடன் தேவையும் அதிகரித்து வருகிறது.

எனவே பொருளாதாரத்தின் மீட்சியை ஆண்டின் இரண்டாம் காலான்சில் காணலாம், அது தொடரும் என்று நாங்கள் நினைக்கிறோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...