follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மேலும் சில இறக்குமதிகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்

மேலும் சில இறக்குமதிகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்

Published on

நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சியை வருடத்தின் இரண்டாம் காலாண்டில் காணலாம் எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி வெளிநாட்டு அலைவரிசைக்கு அளித்த பேட்டியில், நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

“முந்தைய நிலவரத்தையும், தற்போதைய நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு விலையும் தற்போது குறைந்து வருகிறது. அரசாங்கம் தற்போது பல இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெளியிட்டு, மேலும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அனைத்து தரவுகளும் நுகர்வோர் நம்பிக்கையின் மீள் எழுச்சியை சுட்டிக்காட்டுகின்றன, மேலும் இந்த வருடத்தில் ரூபாய் வலுவடைந்து வருகிறது.

மேலும் பங்குச் சந்தை விலைக் குறியீடு மிகவும் நேர்மறையாக இருப்பதைக் காணலாம். எனவே, நுகர்வோரின் ஆர்வத்துடன் தேவையும் அதிகரித்து வருகிறது.

எனவே பொருளாதாரத்தின் மீட்சியை ஆண்டின் இரண்டாம் காலான்சில் காணலாம், அது தொடரும் என்று நாங்கள் நினைக்கிறோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...