follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு - ஜனாதிபதி ரணில் கடும் விமர்சனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு – ஜனாதிபதி ரணில் கடும் விமர்சனம்

Published on

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவமானது ‘வழிபாட்டுச் சுதந்திரத்தை’ மீறுவதாகும், அது ‘கருத்துச் சுதந்திரத்தைப்’ பறிப்பதாக விளங்கக் கூடாது என்றும், வழிபாடு ஒரு பூரண உரிமை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மௌனம் சாதிப்பது குறித்து கேள்வி எழுப்பிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்;

“எல்லாவற்றையும் கருத்துச் சுதந்திரம் என்று கருத முடியாது. அதற்கு வரம்புகள் உண்டு. இது தெளிவாக வழிபாட்டு சுதந்திர பிரச்சினை. குர்ஆனில் பல முக்கியமான அர்த்தமுள்ள விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”

மனித உரிமைகளை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுப்படுத்த முடியாது என்றும், உலகளவில் அனைவருக்கும் பொதுவானது என்றும், தாம் ஒரு பௌத்தராக இருந்தாலும், தாம் உலகின் அனைத்து மதங்களையும் மதிக்கிற ஒருவர் என்றும், மேலும் அனைத்து மதங்களும் இறுதியில் சிறந்த விஷயங்களைக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...