follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1தவறை ஒப்புக்கொண்ட சபாநாயகர் இராஜினாமா

தவறை ஒப்புக்கொண்ட சபாநாயகர் இராஜினாமா

Published on

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின், நாடாளுமன்ற உறுப்பினர் உதவிப் பேராசிரியர் ஜேம்ஸ் லிம்மிடம் விவாதத்தின்போது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

டான் சுவான் ஜின், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தில் நாகரீகமற்ற மற்றும் பொருத்தமற்ற அவதூறுகளைப் பேசியதன் மூலம் தவறு செய்ததாகவும், அதன் விளைவாக, சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

டான் சுவான் ஜினுடன், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லீ வேயும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். டான் சுவான் ஜின் திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். செங் லீ வெய்க்கு சுவான் ஜினுடன் ஒரு முறைகேடான உறவு மற்றும் அந்த உறவு அவரது இராஜினாமாவிற்கு வழிவகுத்தது.

டான் சுவான் ஜினின் இந்த முடிவுக்குப் பதிலளித்த பிரதமர் லீ சியென் லாங், நாடாளுமன்ற மரபுக்கு மாறாக நடந்து கொண்டதன் மூலம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டதை பாராட்டுவதாகவும், நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதற்கான தனது முடிவைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

டான் சுவான் ஜின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர், தனது அனைத்துப் பொறுப்புகளையும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் எட்வின் டோங்கிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் மீது ஊழல் விசாரணை நடைபெற்று வரும் வேளையில், முறைகேடு காரணமாக மேலும் இரு எம்.பி.க்கள் இராஜினாமா செய்திருப்பது சிங்கப்பூர் ஆளும் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...