follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சுகாதார சதி குறித்து கெஹெலிய கருத்து

சுகாதார சதி குறித்து கெஹெலிய கருத்து

Published on

தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலவச சுகாதார சேவையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோளை தாம் பாராட்டுவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஏழு பேர் கொண்ட இந்த குழுவின் சில உறுப்பினர்களை குழுவில் இணைய வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மிகச் சரியான தீர்மானத்தை வழங்குவார்கள் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அந்தக் குழு தனது அறிக்கையை வெளியிடும் திகதியை இன்று அறிவிக்கும் என்று கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தரக்குறைவான மருந்துகள் கொண்டு வரப்பட்டதாகக் கூறி இலவச சுகாதாரப் பொதிகளை முன்னெடுத்துச் செல்லும் சிலர், இது சதியா என்பதை வெளிக்கொணரவும், எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...