follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பவர்களை அநுர அம்பலப்படுத்தினார்

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பவர்களை அநுர அம்பலப்படுத்தினார்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே வேண்டியிருப்பதாலேயே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலுக்கும் மா நிறுவனங்கள் பணம் திரட்டுவதாக அவர் கூறினார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பி அநுர குமார் திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“.. உலகச் சந்தையில் கோதுமை மா குறைந்து, கோதுமை தானியங்கள் குறைந்து, டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்தச் சாதகத்தை நுகர்வோருக்கு மா நிறுவனங்கள் வழங்குவதில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த மக்களின் பணத்தில் நிதியளிப்பதை நான் அறிவேன். எனவே, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒருமித்த கருத்து. ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பணத்தை இறைத்தவர்கள் இவர்கள்தான். பிரீமா நிறுவனம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டியதன் காரணமாக அதிக விலைக்கு மாவினை பாவனையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர். இதற்குப் பதில் அளிப்பது பிரதமருக்கும், அவைத் தலைவருக்கும் கடினம் என்பதை நான் அறிவேன்…” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...