follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1சூதாட்டம் மற்றும் பந்தயம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் பாராளுமன்றத்தில்

சூதாட்டம் மற்றும் பந்தயம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் பாராளுமன்றத்தில்

Published on

சூதாட்டம் மற்றும் சூதாட்டம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய;

“.. சூதாட்டம் மற்றும் பந்தயம் வரிகள் ஒழுங்குமுறை சட்டமானது சூதாட்டம் மற்றும் பந்தயம் வரிகளை திருத்தும் சுற்றறிக்கை அல்லது விதிமுறைகளை கொண்டு வருகிறது.

இதற்கிடையில், சூதாட்டம் மற்றும் பந்தய வரிகளை அதிகரிப்பது தொடர்பான விதிமுறைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 அல்லது 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டு வர உள்ளோம்.

குறிப்பாக, அவற்றை செயல்படுத்துவதில் தாமதம் இருக்காது. ஏப்ரல் முதல் திகதியில் இருந்து இவற்றை அமுல்படுத்துவோம்.

அடுத்த பாராளுமன்றக் காலப்பகுதியில் அடுத்த மாதம் 8 அல்லது 9 ஆம் திகதி அந்த விதிமுறைகளை கொண்டு வர முடியும். ஆனால் அந்த வரிகள் 2023 ஏப்ரல் முதல் நாளிலிருந்து விதிக்கப்படும்..”

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...