follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள்.. அந்த சம்பளமும் மிச்சம்

பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள்.. அந்த சம்பளமும் மிச்சம்

Published on

பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்தால் நாடாளுமன்ற பராமரிப்புக்கு செல்லும் தொகையும், சம்பளமும் மிச்சமாகும் என்றார்.

அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே நாட்டை மீட்டெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் எனவும் அதன் பின்னர் இலங்கை படிப்படியாக கடன் வாங்கும் நாடாக இல்லாமல் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...