follow the truth

follow the truth

August, 1, 2025
HomeTOP1தூக்க நகரமாக மாறிய காலி இனி விழித்திருக்கும்

தூக்க நகரமாக மாறிய காலி இனி விழித்திருக்கும்

Published on

காலி நகரை உறக்கமற்ற நகரமாக மாற்றும் நோக்கில் காலி வர்த்தக சம்மேளனமும் காலி மாவட்ட செயலகமும் இணைந்து புதிய செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த கமகே காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன் கீழ் இம்மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் காலி கோட்டை பாலதக்ஷ மாவத்தையை அண்மித்த பகுதியில் இந்த இரவு நகரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இதன் கீழ், காலி கோட்டையை அண்டிய பகுதிகளில் இரவில் தங்கி பொருட்களை வாங்குதல், அதிக இன்பம், பொழுதுபோக்கு, உள்ளூர் உணவு மற்றும் பானங்கள் என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் காலி நகருக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹேமந்த கமகே சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காலி வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் மகேந்திர லியனகே, சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காலி நகரம் இரவு நகரமாக மாறியிருந்த போதிலும் பின்னர் காலி நகரம் தூக்க நகரமாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், காலியை பரபரப்பான வர்த்தக நகரமாக மாற்றுவதே தமது நம்பிக்கை என மகேந்திர லியனகே தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...