follow the truth

follow the truth

August, 1, 2025
HomeTOP1தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த சிஐடி இற்கு கோரிக்கை

தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த சிஐடி இற்கு கோரிக்கை

Published on

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதம் குறித்து பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

தன்னால் பாடிய தேசிய கீதத்தின் சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர் என்ற வகையில் இலங்கையின் கொடியை மிகவும் பெருமையுடன் தான் உயர்த்தியுள்ளதாகவும், தாய்நாட்டை நேசிக்கும் பாடகியாக தாம் நாட்டின் பெருமையை எக்காலத்திலும் உயர்த்துவதற்காக பல்வேறு வழிகளில் உழைத்துள்ளதாகவும் உமாரா சிங்ஹவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தின் வார்த்தைகளை திரிபுபடுத்தவோ அல்லது எந்தவிதமான விளக்கத்தை வழங்கவோ தான் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும், தான் பாடியதால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும், தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் மட்டத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்ஹவன்ச இன்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...