லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது தேசிய கீதத்தை திரிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடகி உமாரா சிங்கவன்ச, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு நேற்று (7) வந்ததாக மேலதிக செயலாளர் தம்மிக்க முத்துகல ‘டெய்லி சிலோன்’ செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் உமாராவுக்கு மேலதிகமாக, கிரிக்கெட் சபை மற்றும் கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் (இசை) ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வின் போது தேசிய கீதம் பாடுவது தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளரின் (இசை) ஆலோசனையின் பேரில் நடத்தப்படுகின்றமையினாலேயே அவர் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
தேசிய கீதத்தை பாடும் போது ‘மஹதா’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கவில்லை என்றும், அதிக சுருதியில் பாடியதாகவும் உமாராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்களில் வெளியான பாடல் எதிரொலியால் ‘மாதா’ என்ற வார்த்தை ‘மஹதா’ என பிரசாரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் (இசை) வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் குறைந்த தொனியில் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் புலனாய்வுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்திற்குள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரிக்க அமைச்சு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக்க முத்துகல தெரிவித்திருந்தார்.
உமாரா சிங்கவன்சவும் தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து தனது முகநூல் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஒன்றை பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.