follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉள்நாடுகொலையில் முடிந்த காதல்

கொலையில் முடிந்த காதல்

Published on

சுமார் 19 வயதுடைய யுவதியுடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரை சிலர் அடித்துக் கொன்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று (07) நபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மரத்தில் கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு தெலிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் ஆர்முகன் தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுன்னாகம் பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்தமையால் பொறாமை கொண்ட சிறுமியின் தரப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இளம் பெண்ணும் அதே குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், அவரும் தெலிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23, 24, 38, 46 மற்றும் 48 வயதுடைய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...