follow the truth

follow the truth

August, 10, 2025
HomeTOP1டெங்கு தடுப்பூசியை பதிவு செய்வதில் அரசு கவனம்

டெங்கு தடுப்பூசியை பதிவு செய்வதில் அரசு கவனம்

Published on

டெங்கு நோயாளர்களுக்கான தடுப்பூசியை பதிவு செய்வது தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன தெரிவித்தார்.

மருந்து நிறுவனம் ஒன்றின் கோரிக்கைக்கு இணங்க, இது குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

அதன்படி, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வருவதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், மருந்து நிறுவனங்கள் டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் முயற்சித்த போதிலும், அதற்கான அனுமதியைப் பெற முடியவில்லை.

அத்துடன், இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,930 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன் டெங்கு நோய் வேகமாக பரவுவது குறையலாம் எனினும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

இதுவரை சுகாதார வைத்திய அதிகாரியின் நாற்பத்தெட்டு அலுவலகங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...