follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை'

‘அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை’

Published on

அரசாங்கத்தின் அனைத்தையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பணி என நினைப்பதை நிறுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விசேட அறிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பதின்மூன்றாவது திருத்தம் நாட்டுக்கு ஏற்றவாறு அமுல்படுத்தப்பட வேண்டும். அனைவரும் ஆழ்ந்த மத்தியஸ்த மனதுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைக்கத் தயங்குவதைக் காண முடிந்தது. இனி இந்த நிலையை மாற்றுவோம்.

அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான் நம் நாடு முன்னேற முடியும். கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பொதுவான தீர்மானத்தை எடுப்போம்..” என ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...