follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1பணம் செலுத்தி சிறை அறைகளை முன்பதிவு செய்ய வாய்ப்புக்கள் இல்லை 

பணம் செலுத்தி சிறை அறைகளை முன்பதிவு செய்ய வாய்ப்புக்கள் இல்லை 

Published on

திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் சிறைகளைப் பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் செலுத்தி சிறை அறைகள் என்பது சமூகத்தில் பேசப்பட்டதாகவும் அதற்கு எள்ளளவும் இல்லை என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராதா தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைச்சாலைகளில் தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில் கைதிகளை வேலைக்கு அமர்த்தும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்கு 04 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“சிறையில் உள்ள சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 28,468. இவர்களில் 50.3% கைதிகள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளனர். இன்று இந்த நிலைமை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்ட கைதிகள் மீண்டும் சிறைக்கு செல்கின்றனர்.வழக்கமான சூழலில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அவர்கள் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

எனவே, திறன்கள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு அவர்களை வழிநடத்துவது குறித்து இப்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகளவான போதைப்பொருள் கடத்தல் கைதிகள் மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ளனர். அவர்களின் புனர்வாழ்வு மற்றும் சுகாதாரப் பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் இரண்டு இடங்களை அமைப்பது தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. அந்த நடவடிக்கைகளுக்கான செலவுகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கைதிகளின் உணவுக்காக வருடாந்தம் சுமார் 3.9 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது. அந்தச் செலவுகளைச் சமூகம் ஏற்று அவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இப்போதும் கைதிகள் சுமார் 418 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த தொகையை மேலும் அதிகரிக்க மேலும் 200 ஏக்கர் கேட்டுள்ளோம். உணவுக்காக செலவிடப்படும் பெரும் தொகையை குறைக்க முயற்சிக்கிறோம்.

இதேவேளை, அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தினாலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகளே சிறையில் உள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த எல். டி. டி. 33 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இன்று சிறைத்துறை எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இருப்பது சிறைச்சாலைகளில் இடப் பற்றாக்குறைதான். தற்போதுள்ள சிறைகளில் 13,000 கைதிகள் இருந்தாலும், கிட்டத்தட்ட 29,000 கைதிகள் உள்ளனர். இந்நிலைமையை குறைக்கும் வகையில் சிவில் குற்றவாளிகள் தொடர்பான பிணைச் சட்டத்தில் திருத்தம் செய்து அவர்களை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட யசந்த கோதாகொட தலைமையிலான குழுவின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. இதன்படி, இது தொடர்பான சட்ட வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லாத எந்த வழக்கிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில் கைதிகளை வேலைக்கு அமர்த்தும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 04 நிறுவனங்கள் அதற்கான இணக்கத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளன. சிறைத் துறையினரும், கைதிகளும் பிரச்சினையின்றி தொழிற்சாலைகளை நடத்தினால், கைதிகள் உழைக்கும் மக்களாக சமுதாயத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஒரு கைதிக்கு ரூ.1400.00 தொகை ஒதுக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.400-500 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...