follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் நிறைவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் நிறைவு

Published on

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், சதித்திட்டம், உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

ஐந்து நாட்களாக இடம்பெற்று வந்த குற்றச்சாட்டுக்கள் மீதான வாசிப்பு நேற்று (11) நிறைவடைந்ததையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. அம்பாவிலவுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குலுக்கு சதி செய்தமை , உதவி செய்தல் உள்ளிட்ட 23270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌபர் மௌலவி, சஜீத் மௌலவி, முகமது மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, அலியஸ் கெளபர் மாமா, முகமது சனாஸ் தீன், மொஹமட் ரிஸ்வான் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...