follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP1ரணில் - சஜித் இருவரும் இணையும் தருணம் இது

ரணில் – சஜித் இருவரும் இணையும் தருணம் இது

Published on

ரணில் சஜித் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

தேசிய வேலைத்திட்டத்திற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இத்தருணத்தில் ரணில் சஜித் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் மக்களிடம் இருந்து வருவதாகவும், இந்த ஆலோசனைகள் நியாயமானவை என்பதை தானும் ஆமோதிப்பதாகவும் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுடன் இணைவதை விட, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான வேலைத்திட்டத்தில் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை முன்வைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் மற்றும் சஜித் இருவருக்குமே நல்ல மற்றும் கெட்ட குணங்கள் இருப்பதாகவும், ஏனைய கட்சித் தலைவர்களிடமும் அவ்வாறே காணப்படுவதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இனங்கள், மதங்கள் மற்றும் கட்சிகள் என்று நாட்டை பிளவுபடாமல் அடுத்த 25 வருடங்களுக்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு தேசிய திட்டம் தேவை எனவும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...