follow the truth

follow the truth

August, 22, 2025
HomeTOP1ஜனாதிபதி மற்றும் பொஹட்டுவ பிரதிநிதிகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் பொஹட்டுவ பிரதிநிதிகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால் வேட்புமனுவைச் சமர்ப்பித்த தமது உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தேர்தல் நீடிப்பதால், நியமனம் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது பணிகளில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...