follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தீயில் கருகிய ஹோமாகம தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை

தீயில் கருகிய ஹோமாகம தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை

Published on

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் பேட்டையில் தீயினால் நாசமான தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இரசாயன தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தீ விபத்தினால் கழிவு நீர் கலந்து வளிமண்டலத்திற்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

கடந்த டிசெம்பர் மாதம் முதல் இயங்கி வரும் குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலைகளுக்கு உரிய அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்காததற்கு கைத்தொழில் பூங்கா நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என அஜித் வீரசுந்தர குறிப்பிட்டார்.

இதற்கிடையில், எரிந்த தொழிற்சாலையை சூழவுள்ள பகுதிகளுக்கு வீணாக பயணிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...