follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1நாடாளுமன்ற பணிப்பெண்களுக்கு சேலை கட்டாயம்

நாடாளுமன்ற பணிப்பெண்களுக்கு சேலை கட்டாயம்

Published on

நாடாளுமன்றத்திற்கு வரும்போதும் வெளியேறும்போதும் சேலை அணிந்து வர வேண்டும் நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்கள ஊழியர்கள் அனைவருக்கும் குறித்த திணைக்களத்தின் தலைவர், அறிவித்துள்ளதாக நம்பகமான நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் இல்ல பராமரிப்புத் துறையின் சில ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் தகவல்கள் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தின.

அதன்படி, இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் சாதாரண உடையில் இருந்த இல்ல பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பெண்களுக்கு பாராளுமன்றத்திற்கு வரும்போதும் வெளியேறும்போதும் சேலை அணிந்து வருமாறு உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பணிப்பெண்கள் தமது கடமைகளில் சீருடை அணிந்து வழமை போன்று கடமைகளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் சேலை உத்தரவை சில பணிப்பெண்கள் மீறுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்காக நாடாளுமன்ற இல்ல பராமரிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் பணிப்பெண்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் குழு முன் ஆஜராகி சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர அண்மையில் மூவரடங்கிய குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...