follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல்

Published on

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயல் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்துக்கு எதிரானது என்றும், எனவே திருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியதாகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை விரிவுபடுத்துவதாக உறுதியளித்ததாகவும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

நேற்று (28) மாலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...