follow the truth

follow the truth

May, 23, 2024
HomeTOP1எரிவாயு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

எரிவாயு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Published on

எதிர்வரும் வருடத்திற்கான LP எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50%ஐ தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயு விநியோகிப்பதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான எல்பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மறுசீரமைப்பு செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என கண்டறியப்பட்டுள்ளதால், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இடையூறு இன்றி எல்பி எரிவாயு விநியோகம் செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச்...

மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை...

நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்தால் நோயாளி உயிரிழப்பு?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 31 வயதுடைய நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து...