follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எரிவாயு விலை குறித்து இன்று இறுதி தீர்மானம்

எரிவாயு விலை குறித்து இன்று இறுதி தீர்மானம்

Published on

உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 முதல் 1000 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பே எரிவாயு விலை அதிகரிப்புக்கு காரணம் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு எரிவாயு விலை திருத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலையை கருத்தில் கொண்டு, கடந்த மாதமும் எரிவாயு விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாட்டில் போதுமான எரிவாயு இருப்பு இருப்பதால், எரிவாயு விலை திருத்தப்படவில்லை.

கடந்த ஜூலை மாதம், கடைசியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டு, அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 2,982 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,198 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 561 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...