follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

Published on

சூடான் தலைநகர் கார்டூமில் வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு இராணுவம் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவ கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி, சூடானுக்குள் சுமார் 2.2 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...