follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி

மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி

Published on

மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், ஆயுர்வேத சட்டக் கோவையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வணிகப் பயிராக ஊக்குவிப்பதாகவும், மேலும் சில மருந்துகளை வணிகப் பயிர்களாக ஊக்குவிக்க வேண்டும், இல்லையெனில் பாரம்பரிய மருத்துவம் மறைந்துவிடும் என்றும் அவர் கூறினார். ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பொரளை ஆயுர்வேத வைத்தியசாலையின் பெயர் ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை என திருத்தப்படவுள்ளதாகவும், ஆயுர்வேத திணைக்களத்தை வினைத்திறனாக்கும் வகையில் ஆயுர்வேத ஆணையாளர் பதவி இந்த சட்டத்தின் மூலம் ஆயுர்வேத ஆணையாளர் நாயகமாக தரமுயர்த்தப்படும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...