follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு வரி 04 மாதங்களுக்கு நீடிக்கப்படும்

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு வரி 04 மாதங்களுக்கு நீடிக்கப்படும்

Published on

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட சரக்கு வரி எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 01 கிலோவிற்கு 50 ரூபா விசேட சரக்கு வரியை இந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

குறித்த வரி 06 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டதுடன், மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 20 ரூபா என்ற விசேட சரக்கு வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மார்ச் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...