follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கட்சி நெருக்கடி குறித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் குழு கூடுகிறது

கட்சி நெருக்கடி குறித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் குழு கூடுகிறது

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) மத்திய குழு ஒன்று கூடவுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதையடுத்து, கட்சியில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதோடு, இது தொடர்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதிகள் மற்றும் மாவட்ட சபைகளை வலுப்படுத்தும் வகையில் அடிமட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இன்று நடைபெறும் மத்திய குழுவில் இது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணிக் கூட்டணி அல்லது முன்னணியின் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என கட்சிக்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாகவும், அது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு அலையை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்லக்கூடிய பலம் வாய்ந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அதனால்தான் எதிர்வரும் காலங்களில் கட்சிகளை இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் மத்திய குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...