follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுவழக்கறிஞர் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு

வழக்கறிஞர் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு

Published on

வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் அறிக்கைகள் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் சங்க உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்து இந்த அறிவித்தலை வழங்கினர்.

தற்போது கடமையாற்றும் நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடுவதை காணக்கூடியதாகவும், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளது.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதிபதிகள் உட்பட நீதித்துறையின் கௌரவத்தை எப்போதும் பாதுகாப்பேன் என தெரிவித்தார். இது தொடர்பில் உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ, செயலாளர் சட்டத்தரணி இசுரு பாலபடபேடி, பொருளாளர் சட்டத்தரணி சமத் ஜயசேகர, உதவிச் செயலாளர் சட்டத்தரணி மெஹ்ரான் கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...