follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"தயாசிறி வரலாம்: ஆனால் பதவிகள் இல்லை"

“தயாசிறி வரலாம்: ஆனால் பதவிகள் இல்லை”

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சி ஏற்கத் தயார் எனவும் ஆனால் அவருக்கு தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வழங்குவதில் நம்பிக்கை இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(24) கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தயாசிறி விரும்பினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் எந்த நேரத்திலும் வரலாம்” என்று மைத்திரிபால சிறிசேன அங்கு கூறினார்.

கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானம் தொடர்பில், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி விரிவாக உண்மைகளை விளக்கினார்.

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகும் என்றும், ஓரிரு தேர்தல்கள் வரலாம் என்பதால், அதற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...