follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉலகம்வணிக மோசடியில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு

வணிக மோசடியில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு

Published on

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வர்த்தகர்கள் தங்கள் சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை மிகவும் சாதகமான நிபந்தனைகளில் பெறுவதற்காக டிரம்ப் தனது சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டிரம்ப் தனது சொத்தை 2.23 முதல் 3.6 பில்லியன் டாலர் வரை அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நியூயார்க் அரச அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் டிரம்ப் மற்றும் அவரது மூத்த குழந்தைகள் மற்றும் டிரம்பின் பிரச்சாரத்தின் இரண்டு நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நியூயார்க் மாநிலத்திலும் டிரம்ப் வணிகம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கோருகிறார். வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

கனடா பொருட்களுக்கு 35% வரி அமுல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்...

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...