follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரி கைது

யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரி கைது

Published on

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெராவில் கலந்து கொண்ட பெண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாககிச்சூட்டு சம்பவம் இன்று (30) அதிகாலை 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெரா ஊர்வலத்தைத் தொடர்ந்து, பெண் யானை மகாவலி ஆற்றின் கரையில் சங்கிலியால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த அதிகாரி ‘சீதா’ எனும் 48 வயதுடைய யானையை, காட்டு யானை என்று தவறாக நினைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனவிலங்கு பாதுகாப்புத் துறை கால்நடை மருத்துவர்களால் தற்போது யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...