follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை நிராகரித்தது ICC

ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை நிராகரித்தது ICC

Published on

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி, உரிய நியமனம் ஏற்கப்பட மாட்டாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் மாத்திரம் இணைந்து செயற்படுவதாகவும், விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவிற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஐ.சி.சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ள விளையாட்டு அமைச்சர், விளையாட்டு சட்டத்தின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களையும் கண்காணிக்கும் அதிகாரம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட தணிக்கை அறிக்கைகள் உள்ளிட்ட உண்மைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு சரியாக தெரிவிப்பதே இந்த குழுவின் முக்கிய நோக்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...