follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கியது சட்டபூர்வமானது – உச்சநீதிமன்றம்

நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கியது சட்டபூர்வமானது – உச்சநீதிமன்றம்

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று (06) காலை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக அமைச்சர் நசீர் அஹமட் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன் அவரும் 20வது திருத்தத்திற்கு ஆதரவளித்த பட்டியலில் ஒருவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு அதுவே முக்கிய காரணம் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அன்று தெரிவித்திருந்தார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...