follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை அஸ்வெசும இன்னும் இல்லை

சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை அஸ்வெசும இன்னும் இல்லை

Published on

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தெரியவந்துள்ளது.

அதன்படி ஜுலை மாதம் தொடர்பான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் (செயல்பாடு) ரத்னசிறி ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘அஸ்வசுமா’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பயனாளிகளின் பட்டியலுக்கு எதிராக சுமார் 10 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை வாரியம் பெற்றுள்ளது.

10 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில் 7 இலட்சம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மீதமுள்ள 3 இலட்சம் மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டார்.

இது தவிர 5 இலட்சம் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பல்வேறு பிரச்சினைகளால் ஜூலை மாதத்திற்கான சமுர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதுள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, அடுத்த வருடம் (2024) ஜனவரி மாதம் முதல் எவ்வித தாமதமும் இன்றி கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 20 இலட்சம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 4 இலட்சம் மாற்றுக் குடும்பங்கள், 4 இலட்சம் அழிந்து வரும் குடும்பங்கள், 8 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் மற்றும் 4 இலட்சம் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் உள்ளன.

அதன்படி, இது தனிநபர்களின் அடிப்படையில் 85 இலட்சமாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...