follow the truth

follow the truth

May, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனக ரத்நாயக்கவைக் கொலை செய்ய ஒப்பந்தமா?

ஜனக ரத்நாயக்கவைக் கொலை செய்ய ஒப்பந்தமா?

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக திட்டமிட்ட குற்றக் கும்பல் ஒன்று 15 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் பதுங்கியிருக்கும் ப்ளூமண்டல் சங்கா இவ்வாறு கப்பம் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று(16) காலை 7.10 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ப்ளூமண்டல் சங்கா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரொருவரிடம் தன்னை கொலை செய்ய 80 இலட்சம் ரூபா கூலி கொடுக்கப்பட்டதாகவும் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாது தனக்கு 15 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் தொலைபேசியில் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி அழைப்பின் பிரகாரம் முறைப்பாட்டாளர் ஜனக ரத்நாயக்க தனது அலுவலகத்தில் உள்ள பணத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவை தன்னை அழைத்த நபரிடம் ஒப்படைக்குமாறு பணியாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...