follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை நீக்கம்

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை நீக்கம்

Published on

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை முழுமையாக நீக்க வேண்டும் என சுயாதீன விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தனுஷ்க குணதிலக விடுவிக்கப்பட்டதையடுத்து, குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, கற்பழிப்பு குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் வாரியம் தனுனிஷ்கவுக்கு எதிராக கிரிக்கெட் தடை விதித்தது.

அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு சமீபத்தில் இந்த வழக்கில் இருந்து தனுஷ்கா விடுவிக்கப்பட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...