follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1ஹரக் கட்டாவுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

ஹரக் கட்டாவுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

Published on

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படும் நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவிற்கு தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் காவலில் உள்ள மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் காணப்பட்ட உரிமையற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...