follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

Published on

மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஈராக் அரசாங்கம் உதவ மாட்டார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியதையடுத்து, ஈராக் உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் அமெரிக்க வீரர்கள் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் தங்கள் குடிமக்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...