follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

Published on

ஹமாஸ் படையினர் மேலும் 2 பணயக் கைதிகளை விடுவித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஹமாஸ் படையினர் ஏராளமான இஸ்ரேலியர்களையும் வெளிநாட்டினரையும் பணயக் கைதிகளாக பிடித்துச்சென்றனர்.

பணயக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில், மேலும் இரண்டு பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த இரண்டு இஸ்ரேலியர்களை ஹமாஸ் தற்போது விடுவித்துள்ளது.

அவர்கள் வீட்டில் இருந்தபோது ஹமாஸ் அவர்களை பிடித்துச் சென்றது. அவர்களது கணவர்களும் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

சுமார் 220-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் ஹமாஸ் வசம் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...