follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1ஜேவிபி ஆட்சி அதிகாரத்தினை கோருவது சோதனை செய்யவே - ஆஷு

ஜேவிபி ஆட்சி அதிகாரத்தினை கோருவது சோதனை செய்யவே – ஆஷு

Published on

நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தனக்கு ஆட்சியை கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் ஜனாதிபதி பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை எனத் தெரிவித்த ஆஷு மாரசிங்க, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளால் செயற்பட முடியாது என்பது இலங்கையிலும் உலகிலும் நிரூபணமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விளாடிமிர் சோலன்ஸ்கி ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து உக்ரேனில் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் ஆனால் இன்று யுத்தம் காரணமாக அவர் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தனது கட்டுப்பாட்டில் கொண்டு டொலர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை எனவும் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆஷு மாரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...