follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் புதிய சட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் புதிய சட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை

Published on

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், தற்காலத்துக்கு இணக்கமான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மாறும் போது மாறாத நிலையான கொள்கைகளை ஒவ்வொரு துறையிலும் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் ஒரு கட்டமாக ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிதி ஒழுக்கம் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முன்வருகின்றன. எனவே நாட்டில் நிதி ஒழுக்கத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பான குழு உட்பட பல்வேறு குழுக்களை நியமிக்கவும் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை கையாள்வதற்கான சட்டமூலமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மறுதினம் மூடப்படவுள்ள பாடசாலைகள் விபரம்

உள்ளூராட்சி தேர்தல்கள் காரணமாக, மே 7, 2025 அன்று சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகம்...

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான்...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...