follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்

போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்

Published on

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு இலங்கையர்களிடம் இருந்து வலுவான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் இஸ்ரேலிய வேலைகளுக்கு விசா பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 19 இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று இஸ்ரேலுக்கு வேலைக்காகச் செல்வதாக வெளியான தகவல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்புத் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பாவிடம் வினவிய போது, அதற்கான வாய்ப்புகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு வருகிறதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஹமாஸ் போராளிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்க ஜயதிலக்கவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சடலம் இன்று இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

டுபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு விமானம் மூலம் சடலம் நாளை இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் பலஸ்தீனத்தின் காஸா பகுதியிலும் இஸ்ரேலின் மேற்குக் கரையிலும் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – வியட்நாம் ஜனாதிபதி சந்திப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று(05) அமோக...

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம்...

பல்கலை மாணவன் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும்...