follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்

போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்

Published on

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு இலங்கையர்களிடம் இருந்து வலுவான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் இஸ்ரேலிய வேலைகளுக்கு விசா பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 19 இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று இஸ்ரேலுக்கு வேலைக்காகச் செல்வதாக வெளியான தகவல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்புத் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பாவிடம் வினவிய போது, அதற்கான வாய்ப்புகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு வருகிறதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஹமாஸ் போராளிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்க ஜயதிலக்கவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சடலம் இன்று இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

டுபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு விமானம் மூலம் சடலம் நாளை இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் பலஸ்தீனத்தின் காஸா பகுதியிலும் இஸ்ரேலின் மேற்குக் கரையிலும் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...