follow the truth

follow the truth

August, 20, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரச ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறதா?

அரச ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறதா?

Published on

பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவாக ஒக்டோபர் 27, 2023 திகதியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்கிரமசிங்க ((President Tamil Wickremesinghe)) என்று தவறாக எழுதப்பட்டிருந்தது.

கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் பிரதம மந்திரி அலுவலக இணையத்தளத்தில் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டது.

அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.பி.விக்னேஸ்வரன், யதாமினி குணவர்தன, அதிபர் கவிதா ஜயவர்தன மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு தெரிவித்ததையடுத்து, பிழை திருத்தப்பட்டது, இருப்பினும், எதிர்காலத்தில் வெளியிடும் விடயங்களில் அரச ஊடகங்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...