follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வு

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வு

Published on

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வினை மேற்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

தற்போதுள்ள பொது கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, மின் கட்டண மதிப்பாய்வு காலம் 6 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனைக் கையாள்வதால் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, 3 மாத கால அவகாசத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆதரவுடன் இலங்கை மின்சார சபையானது ஆற்றலை அனுப்பும் தணிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் நீர்மின் கணிப்புகளை வலுப்படுத்தவும் தற்போதுள்ள பொது நடைமுறை வழிகாட்டல்களை திருத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரினால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...