follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமருத்துவப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

மருத்துவப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

Published on

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை ஓரளவு தணிக்கும் வகையில் வைத்தியர்களை அரசாங்கம் தக்கவைக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மாகாண மட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...